கொல்லிமலையில் கார் மரத்தில் மோதி விபத்து - சுற்றுலா பயணி பலி, 4 பேர் காயம் - Seithipunal
Seithipunal


கொல்லிமலையில் கார் மரத்தில் மோதிய விபத்தில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன்(39). இவர் மனைவி மற்றும் சித்தப்பா, சித்தி ஆகியோருடன் நேற்று அதிகாலை காரில் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது கொல்லிமலை 67வது கொண்டை ஊசி வளைவு அருகே, கார் சென்றபோது திடீரென மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ரகுநாதன் பலத்த காயம் அடைந்துள்ளார். மேலும் ஓட்டுனர் உட்பட நான்கு பேர் லேசான காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ரகுநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tourist killed 4 injured in car accident in kollimalai


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->