திருப்பூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! மிஸ் பண்ணிடாதீங்க..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனத்தினர் பங்கேற்கிறார்கள். எனவே, வேலைதேடுபவர்கள் தங்களின் வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான காலியிட விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

கல்வி தகுதி:

எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு வருபவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதை சரி செய்து புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ள முடியும். தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தனியார் துறையில் வேலைக்கு சேருவதால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படாது. இது முற்றிலும் இலவசமாகும். மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 94990-55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow may 18 employment camp in Tiruppur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->