நாளை (03.12.2022) அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Tomorrow local holiday for kanniyakumari district
நாளை (டிசம்பர் 3ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு நாளை ( டிசம்பர் 3ஆம் தேதி) அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய வரும் ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Tomorrow local holiday for kanniyakumari district