வெளுத்து வாங்கும் மழை - சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.!
tomarrow chennai schools holiday for rain
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதைத் தொடர்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 4 மணி நேரத்தில் 7 செ.மீட்டர் மழையும், அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 19 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
tomarrow chennai schools holiday for rain