இன்று உலகபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு.. 700 மாடுகள் பங்கேற்பு..! - Seithipunal
Seithipunal


உலக புகழ் பெற்ற பாலமேட்டில் இன்று ஜல்லிகட்டி போட்டி நடைபெற உள்ளது.

பொங்கல் பண்டிகையோட்டி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நேற்று பொங்கல் பண்டிகையில் மதுரையில் அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிகட்டு போட்டி இன்று நடைபெற உள்ளது. 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

இன்றைய போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முதல் பரிசாக காரும் , இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனமும் வழங்கப்பட உள்ளது. மேலும்,சிறந்த ஜல்லிகட்டு காளைக்கு நாட்டு பசுவும் கன்றும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Palamedu jallikattu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->