கஞ்சா விற்பனையை ஒழித்திட ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும்..இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் ! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் பெரும் அளவில் இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கும் கஞ்சா விற்பனையை ஒழித்திடு. போலீஸ் ரோந்து வர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி, கிளை மாநாடு பாக்கமுடையான்பட்டு  காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடைபெற்றது.மாநில செயலாளர்  அ.மு சலீம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்,

 எதிர்கால செயல்பாடுகள் குறித்து,  மாநில துணை செயலாளர்தோழர்K.சேதுசெல்வம்பேசினார்.இதையடுத்து புதியநிர்வாகிகள்தேர்வுசெய்யப்பட்டனர்,9பேர்கொண்டகமிட்டிஅமைக்கப்பட்டது.இதில்கிளைசெயலாளராகR.வெங்கடேசன்,துணைசெயலாளராகE.பாஸ்கர்,பொருளாளராகP.சிவகுமார்ஆகியோர்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அப்போது மாநாட்டில்  கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 பாக்கமுடையான்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அடைப்புக்கு உள்ளாகி நோய் பரவும் அபாயம் உள்ளது இதனை தூர்வாரிட நடவடிக்கை எடு!

பாக்கமுடையான்பட்டு அரசு அச்சக சாலையில் குடிமை பொருள் வழங்கல் துறை, கலால் துறை, அரிசி ஆலை, கட்டிட தொழிலாளர்கள் நல வாரியம், பாசிக்,, பாப்ஸ்கோ போன்ற அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு நவீன கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடு!
 
பாக்கமுடையான்பட்டு அரசு ஆரம்பப்பள்ளி சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் வேகத்தடை அமைத்திடு!

பாக்கமுடையான்பட்டு செல்வ விநாயகர் கோவில் எதிரில் உள்ள சிக்னல் இரண்டு முறை புதுப்பித்தும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடு!
 
பாக்கமுடையான்பட்டு இதயா மகளிர்  கல்லூரி மற்றும் அரசு ஆரம்பப் பள்ளிக்கு அருகில் காலை மாலை இருவேலையும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடு! 

பாக்கமுடையான்பட்டு அரசு நூலகம் அருகில் சைடு வாய்க்கால்கள் உடைந்து கிடக்கிறது, இதை சரி செய்ய   நடவடிக்கை எடு.

 அரசு உத்தரவின் பேரில் மதுக்கடைகள் மூடப்படும் நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடக்கிறது, இதை தடுத்திட நடவடிக்கை எடுத்திடு, போக்குவரத்துக்கு இடையூறாக ECR -ல் உள்ள மதுபான கடைகளை அகற்றிடு!

 கிழக்கு கடற்கரை சாலை மீன் மார்க்கெட் அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு அறிவித்தது, இதனை உடனடியாக செயல்படுத்திடு!

பாக்கமுடையான்பட்டு பகுதியில் உப்பு கலந்த குடிநீர் வருவதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்திடு!

ராஜீவ் காந்தி சிக்னலில் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகிறார்கள். அரசு அறிவித்த மேம்பால திட்ட பணிகளை துவக்கி முடித்திட நடவடிக்கை எடுத்திடு!
 
புதுச்சேரியில் பெரும் அளவில் இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கும் கஞ்சா விற்பனையை ஒழித்திடு. போலீஸ் ரோந்து வர நடவடிக்கை எடுத்திடு.

அதிக கட்டணம் வசூலிக்கும் மின்சார துறை அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின் தடை செய்கிறது. சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்திடு.

அனைத்து ரேசன் கடைகளையும்  திறந்து பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிடு.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

To eliminate the sale of cannabis patrol work must be intensified Indian Communist Partys insistence


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->