முல்லைப் பெரியாறு வழக்கு - தமிழக அரசு பதில் மனு தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற சவதேச குழுவை கொண்டு முல்லைப் பெரியாறு அணையை சோதனை நடத்துமாறு தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனதில் அவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது எனவும், மழைக்காலங்களில் தொடர்ச்சியாகவும் மற்ற நேரங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறையும் மேற்பார்வை குழு ஆய்வு செய்து வருகிறது. எனவே முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய புதிய குழு எதுவும் தேவை இல்லை என தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt submitted reply petition in mullai periyaru case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->