நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருந்த வழக்கு; மூன்று பேரை கைது செய்துள்ள நெல்லை மாநகர காவல்துறையினர்..!
Three people arrested in Nellai in a case involving the possession of a country made pistol
நெல்லையில் நாட்டு கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று பேரை திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், முஹம்மதியபுரத்தினை சேர்ந்த முஹம்மது முஸ்தபா மகன் ஷாகுல்ஹமீது (வயது 26), திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூரை சேர்ந்த அசநாதபுரத்தினை சேர்ந்த துல்கர்னி மகன் சிக்கந்தர் ஷேக் ஒலி (25), திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையத்தை சேர்ந்த சாகுல் ஹமீது பாஷா மகன் முசாமில் முர்ஷித் (21) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களிடம் போலீசாரை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
Three people arrested in Nellai in a case involving the possession of a country made pistol