தமிழக ரேஷன் கடைகளில் இனி கட்டாயம் இல்லை... தமிழக அரசு அதிரடி உத்தரவு...!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் பொது மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறிப்பிட எடை அளவுகளில் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அதேபோன்று மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை விற்பதற்கு கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை தேவைக்கு ஏற்ப யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். சில ரேஷன் கடைகளில் அனுமதி வழங்கப்படாத பொருட்களை கட்டுப்பாடற்ற பிரிவுகளில் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. மேலும் அவை காலாவதி தேதி முடிந்தும் தரமற்ற பொருட்களாக இருப்பதாகவும் பல புகார்கள் எழுந்தன.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் கட்டுப்பாடற்ற பிரிவுகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டுமென மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நியாய விலை கடைகளில் கட்டுப்பாடு ஏற்ற பொருட்களின் கீழ் அனுமதி வழங்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் பொது மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt orders only permitted items sold in non restricted sections at ration Shop


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->