தமிழகத்தில்  6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை - தமிழக அரசு அரசாணை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது..

தமிழகத்தில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்களை தடுக்கும் வைக்காயிலும், தற்கொலை எண்ணங்களைத் தடுக்கும் நோக்கிலும், அபாயகரமான 6 பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடையை தமிழக அரசு விதித்துள்ளது.

தற்கொலை செய்து கொள்ள அதிக அளவில் பயன்படுத்தப்படும் எலி பேஸ்ட்டை ஏற்கனவே தமிழக அரசு தடை செய்து உள்ள நிலையில், மேலும், 6 வகையான பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக, மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மோனோ குரோட்டோபாஸ், ப்ரோஃ பெனோபாஸ், அசிபேட், குளோர்பைரி ஃபாஸ் உள்ளிட்ட ஆறு பூச்சுக் கொல்லி மருந்துகளுக்கு தமிழகத்தில் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Order Suicide issue 2023


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->