மின் கணக்கீடு செய்யவே ஆள் இல்லை! தள்ளாடும் மின்சார வாரியம்! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் பராமரிப்பு மற்றும் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மின் கணக்கீடு பணி செய்ய போதிய பணியாளர்கள் இல்லாததால் 6வது மாதம் செலுத்திய மின்கட்டணத்தையே 8வது மாத கணக்கீட்டிற்கு செலுத்துமாறு மற்றும் வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பிரேம் என்பவர் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

குறிப்பாக பழையனூர், சாத்தனூர், கானூர், சித்தம்பூர், வெள்ளக்குடி, வேளுக்குடி ஆகிய கிராமங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்காக செய்தி தாள்களில் விளம்பரம் கொடுத்துள்ளார். உதவி மின் பொறியாளர் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆறாவது மாதம் கோடை காலம் என்பதால் அதிக மின் நுகர்வு பயன்பாட்டினால் அனைத்து நுகர்வோர்களுக்கும் அதிக அளவில் மின்கட்டணம் செலுத்தி இருப்பார்கள்.

ஆனால் தற்பொழுது கோடை காலம் நிறைவடைந்ததால் மின்சார பயன்பாடு குறைந்திருக்கும், இதனால் மின் கட்டணமும் குறைந்திருக்கும். இவ்வாறு இருக்க எப்படி பழைய கட்டணம் செலுத்துவது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இவ்வாறு விளம்பரம் கொடுத்த உதவி மின் பொறியாளர் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNEB advertising for insufficient manpower to electricity calculation


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->