பொங்கல் பரிசு குறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல்.. மகிழ்ச்சியில் மக்கள்.!!
TN govt new announcement for pongal gift
பொங்கல் பண்டிகைக்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஜனவரி 9 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்குள் அதனை வினியோகம் செய்யவும், விடுபட்டவர்களுக்கு 13 ஆம் தேதிக்குள்ளும் வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பை பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வரும் 21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத் தொகை பெறாத 3.91 லட்சம் பேருக்கு வரும் 21-ம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
TN govt new announcement for pongal gift