8GB RAM, 256GB SSD, 15.6' டிஸ்பிளே உடன் தமிழக அரசு வழங்கப்போகும் லேப்டாப்! டெண்டர் அழைப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த பட்ஜெட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப் வழங்கப்படும் எனவும், ஆரம்ப கட்டமாக ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு லேப்டாப் விலை சுமார் ரூ.20,000 என கணிக்கப்படும் வகையில் தரமான சாதனங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு நிறுவனமான எல்காட் (ELCOT) சர்வதேச அளவில் திறந்த டெண்டர் அழைத்துள்ளது.

மடிக்கணினிகளில் 8GB RAM, 256GB SSD, 14 அல்லது 15.6 அங்குல அளவிலான திரை போன்ற உயர் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெறும். கல்வியில் டிஜிட்டல் வளங்களை அதிகம் பயன்படுத்தும் இந்தக் காலக்கட்டத்தில், இந்த திட்டம் மாணவர்களுக்கு நேரடி பயனளிக்கக்கூடிய ஒரு முக்கிய முயற்சியாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN budget TN Govt laptop


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->