பேர் சொல்லாம விட்டது குத்தமா..!! உதவி பொறியாளரை மிரட்டிய திமுக எம்எல்ஏ..!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தை எடுத்த திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமான பணியை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் கட்டுமானம் தொடர்பான ஆய்வு கூட்டம் அதே வளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவி பொறியாளர் ராஜா, மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசிய உதவிப் பொறியாளர் ராஜா திருப்பூர் மேற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜ் பெயரை வாசிக்காமல் விட்டுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ செல்வராஜ் "எப்படி என் பெயரை கூறாமல் விடலாம். புகார் தெரிவித்தால் வேலை காலியாகி விடும்" என அதிகாரிகள் முன்னிலையில் மிரட்டினார்.

அதற்கு உதவி பொறியாளர் ராஜா "சாரி' என்று கூற "மண்ணாங்கட்டி சாரி" என ஆவேசமாக பேசினார். தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ செல்வராஜ் உதவி பொறியாளர் ராஜாவிடம் ஆவேசமாக பேசிய பொழுது உடைந்திருந்த அனைத்து அதிகாரிகளும் அமைச்சரும் அமைதியாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirupur DMK MLA threatened assistant engineer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->