கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: பின்னணியில் வெளியான காதல் கதை! - Seithipunal
Seithipunal


திருப்பூர், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரவணன் (வயது 19) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படைத்து வந்தார். 

அதே பகுதியைச் சேர்ந்த கிருத்திகா (வயது 18) காங்கேயத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 

சரவணன் கிருத்திகா இருவரும் காதலித்து வந்த நிலையில் கிருத்திகா கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில் நேற்று மாலை சரவணன் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், உறவினர்களான சரவணன்-கிருத்திகா இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வேறு கல்லூரியில் படித்து வந்துள்ளனர். 

அப்போது சரவணன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் உடன் பேச பழகக் கூடாது என கிருத்திகாவிடம் தெரிவித்துள்ளார். 

மேலும் அடிக்கடி சரவணன் தன் கிருத்திகா மீது சந்தேகப்பட்டதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்த கிருத்திகா விநாயகர் சதுர்த்தி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை தொடர்ந்து காதலி உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் சரவணன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

காதலன், காதலி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tirupur College student suicide 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->