16 வயது சிறுமி குழந்தை திருமணம்... 30 வயது கயவனுடன், கைதான பெற்றோர்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பவானி நகர் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் நெடுங்குளம் கிராமத்தை சார்ந்த நாகராஜ் என்பவரின் மகன் சடையாண்டி (வயது 30). 

சடையாண்டி கடந்த 20 ஆம் தேதி சிறுமியை கட்டாயம் திருமணம் செய்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.

இந்த விசாரணைக்கு பின்னர், 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த சடையாண்டி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சடையாண்டி மற்றும் அவரது குடும்பத்தினரை போக்ஸோவில் கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruppur Child girl 16 Years old got Child Marriage by Madurai Youngster Police Arrest


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->