நெல்லை +2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரதான குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; 2 பேருக்கு சிறை தண்டித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
Tirunelveli POCSO Court Sentences Main Accused to Death in 2022 Schoolgirl Gang abuse Case Two Accomplices Imprisoned
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கின் பிரதான குற்றவாளியான சின்னகுட்டி (27) என்பவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய முனீஸ்வரன் (27) என்பவருடன் செல்போனில் பேசிப் பழகிய அம்மாணவி, அவரை நம்பிச் சென்றபோது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சின்னகுட்டிக்கு தூக்கு தண்டனையும், மற்றொரு குற்றவாளியான முருகேசனுக்கு (27) 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சின்னகுட்டி என்பவர் மீது ஏற்கனவே சில கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tirunelveli POCSO Court Sentences Main Accused to Death in 2022 Schoolgirl Gang abuse Case Two Accomplices Imprisoned