நண்பனின் மனைவி கண்டித்ததால் ஆத்திரம்.. அரங்கேறிய கொடூரம்.. நெல்லையில் பகீர்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலை அடுத்துள்ள பாப்பாக்குடி செங்குளம் பகுதியை சார்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 40). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முப்பிடாதி (வயது 35). இவர்கள் இருவருக்கும் 11 வயது மாரிச்செல்வம் என்ற மகன் இருக்கிறார். 

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் முத்துப்பாண்டி பணிக்கு சென்றுவிட்ட நிலையில், அவரின் மகன் மாரிச்செல்வம் தனது பாட்டியின் வீட்டிற்கு உறங்க சென்றுள்ளார். முப்பிடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி, தனது மனனவி கொலை செய்யப்பட்டு பிணமாக இருப்பதை கண்டுள்ளார். 

இதனையடுத்து குறித்து பாப்பாக்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முப்பிடாதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த முதற்கட்ட விசாரணையில், இதே பகுதியை சார்ந்த முத்துபாண்டியின் நண்பரான கந்தபாண்டி என்பவரின் மகன் பிரேம் (வயது 35) மற்றும் சுப்பிரமணியனின் மகன் துர்க்கை முத்து (வயது 20) ஆகியோர் முப்பிடாதியை வெட்டி கொலை செய்தது உறுதியாகியுள்ளது. 

மேலும், முத்துபாண்டிக்கும் - பிரேமுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அங்கு வந்திருந்த முப்பிடாதி பிரேமை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரேம் மற்றும் துர்க்கை முத்து முப்பிடாதியை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tirunelveli Mukkudal Murder Police Investigation 18 November 2020


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->