இரு சக்கர வாகனத்தில் சாகச பயணம்.,விபத்தில் மூவர் பலியான சோகம்..!! - Seithipunal
Seithipunal


இரு சக்கரத்தில் சாகச பயணம் மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் பகுதியில் வசித்து வருபவர் அபித் (21). இவரும் இவரது நண்பர்களான பூவரசன் (19) சையப் (20) மூவரும் இரு சக்கர வாகனத்தில் பாகலூர் சாலையில் சென்றுள்ளனர்.

இவர்கள் சாலையில் செல்லும் போது அதிவேகமாக பயணித்தது மட்டுமின்றி சாகசத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் மாலூர்  சாலையில் வந்து கொண்டிருக்கு போது ஒரு ஆட்டோ எதிர்பாராத விதமாக அவர்களின் மீது மோதியது.

இதனால் சம்பவ இடத்திலேயே  இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞரை மீட்டு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த நான்கு பெண்களும் பலத்த காயமைடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் செல்லும் போது அதி வேக பயணமும், சாகசம் செய்வதும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் இது போன்ற செயல்கம் மீண்டும் மீண்டும் நடைபெறுவது வேதனைக்குரிய விஷயம் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three killed on adventure trip near hosur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->