கனமழை எதிரொலி || 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!
three district school holiday in tamilnadu for rain
கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட
மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுத் தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில், ‘’வானிலை அறிக்கையின்படி பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள காரணத்தால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் 25.11.2023 அன்று செயல்படாது. எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
three district school holiday in tamilnadu for rain