தூத்துக்குடி : கண்மாயில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி : கண்மாயில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் மகேஷ், அருண். இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகன் சுதனுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கண்மாய் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளனர். 

அப்போது திடீரென சிறுவர்களை காணவில்லை. அவர்கள் சென்ற மிதிவண்டி மட்டும் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், சிறுவர்கள் கிடைக்கவில்லை. 

அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்த கண்மாயில் சென்று பார்த்த போது சிறுவன் அருணின் உடல் மிதந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கண்மாயில் இறங்கி சிறுவர்களின் உடல்களை மீட்டனர். 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரையானது வந்து 3 சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் மூன்று சிறுவர்கள் கண்மாயில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three boys died fell drowned canal in thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->