#தமிழகம் || மதுபோதையில் ரகளை செய்த காவலர்கள் 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி செல்லக்கூடிய முத்துநகர் விரைவு ரயிலில், குடிபோதையில் பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 3 போலீசார் உள்ளிட்ட 5 பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய முத்துநகர் விரைவு ரயிலில், எஸ் 3 பெட்டியில் பயணம் செய்த, 3 போலீசார் மற்றும் அவர்களது உறவினர்கள், மதுபோதையில் அந்த ரயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகளுக்கு இடையூறு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த ரயில் பெட்டியில் பயணித்த ஆங்கில நாளிதழில் பணிபுரியும் சிவக்குமார் என்ற நபர், ட்விட்டரில் ரயில்வே அமைச்சகத்திடம் மது போதை ஆசாமிகள் குறித்து பதிவு செய்துள்ளார். மேலும் ரயில்வே காவல் படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து விருதாச்சலம் ரயில்வே காவல் துறையினர் மூன்று காவலர்கள் மற்றும் 2 உறவினர்கள் உள்ளிட்ட 5 பேரை உடனடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெளியான ஒரு தகவலின் படி, இந்த மது போதையில் அட்டூழியம் செய்த கும்பலில் இரண்டு போலீசார் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thothukudi police arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->