பள்ளிப்பட்டு: 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை.!
Thiruvallur Pallipattu 16 Year girl Suicide Police Investigation 10 Jan 2021
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு ஆர்.கே. பேட்டை இஸ்லாம் நகரை சார்ந்தவர் ஜெய்லானி (வயது 45). இவரது மகன் அமீன் பாஷா (வயது 18), மகள் தஸ்லீம் (வயது 16). கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தஸ்லீம் வீட்டில் இருந்த சமயத்தில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவரது உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அலறவே, அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உள்ளே சென்று பார்க்கையில் விபரீதம் புரிந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே, சோளிங்கர் மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சிறுமி வயிற்று வலி பொறுக்க இயலாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvallur Pallipattu 16 Year girl Suicide Police Investigation 10 Jan 2021