சவக்கிடங்கில் இருந்த உடலின் மூக்கை கடித்து குதறிய நாய்கள்.. அலட்சியத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.!
Thiruvallur Dog Byte Death Body Nose During Waiting for Mortuary Report
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்ட நபரின் மூக்கு நாய்களால் கடிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எடலப்பபாளையம் பகுதியைச் சார்ந்த 33 வயது நோயாளி, நெஞ்சுவலி காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உடல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்படவே, பிரேத பரிசோதனை நிறைவு பெற்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உடலில் மூக்கு பகுதி இல்லாதது இருப்பதை கண்டு உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக ஊழியர்களிடம் விசாரிக்கையில், மூக்கை நாய் கடித்து விட்டதாக அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர். ஆத்திரத்துக்கு உள்ளாகிய உறவினர்கள், இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvallur Dog Byte Death Body Nose During Waiting for Mortuary Report