தென்காசி | சார்பதிவாளராக இருந்த பெண் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Thenkasi female officer house Anticorruption department raid
தென்காசி, ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அரி நாராயணன். இவரது மனைவி ஆனந்தி. இவர் சார்பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இவர் போலி பத்திரப்பதிவு செய்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஒரு வருடமாக வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டிற்கு இன்று காலை தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவலர் தலைமையில் போலீசார் வந்திருந்தனர்.

அவர்கள் திடீரென ஆனந்தியின் வீட்டிற்குள் சோதனை நடத்தி, அவர் வைத்திருந்த ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர். ஆனந்தி மீது முன்னதாகவே போலி பத்திரங்களை பதிவு செய்து கொடுப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துகின்றனர்.
இவரது கணவர் அரி நாராயணன் வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார். மேலும் இவர் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராகவும், மருதம்புத்தூரில் சி.பி.எஸ்.சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
Thenkasi female officer house Anticorruption department raid