வாலிபர் சரமாரியாக குத்திக்கொலை.! 5 பேரிடம் போலீசார் விசாரணை.! தேனியில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் வாலிபரை மர்மகும்பல் சரமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கோம்பை ஆணைமேடு தெரு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சதீஷ்குமார் (28). இவர் நேற்று முன்தின இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென வழி மறித்த மர்ம கும்பல் ஒன்று சதீஷ்குமாருடன் தகராறு செய்துள்ளது. இதையடுத்து மாட்டு வண்டியின் அச்சாணியாள் சதீஷ்குமாரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து மர்மகும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சதீஷ் குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் மாட்டுவண்டி பந்தயம் தொடர்பாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று 5 பேரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The youth was stabbed to murder in theni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->