திருமணத்திற்கு பின்னும் காதலை கைவிட மறுத்த இளம்பெண்., தகாத உறவை கண்டித்த கணவன் அடித்து கொலை..!! - Seithipunal
Seithipunal


தகாத உறவை கைவிட சொன்னதால் கணவை கொன்றுவிட்டு இளம்பெண் நாடமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், போரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிதுரை இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த 20 தேதி முதல் பாண்டிதுரையை காணவில்லை. இதனால் அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நந்தினியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்குபிடி விசாரணையில் ஈடுப்பட்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தன.

நந்தினி திருமணத்துக்கு முன்னர் வேறொருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அவரை அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாண்டிதுரையுடன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்

இதனிடையே நந்தினி திருமணத்திற்கு பிறகும் தனது காதலனுடன் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த பாண்டிதுரை நந்தினியுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். சம்பவதன்று, நந்தினி தனது காதலுடன் பேசி கொண்டிருந்ததால் இருவருக்கும் இடையில் சண்டை நடந்துள்ளது. இதனால், ஆத்திரமைடைந்த நந்தினி அரிவாளால் கணவனின் தலையில் அடித்துள்ளார்.

 இதில் பாண்டிதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சடலத்தை அருகில் உள்ள உறை கிணற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல மற்றவர்களுடன் சேர்ந்து அவரும் பாண்டிதுரையை தேடியுள்ளார்.

அவர் சொன்ன இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அழுகிய நிலையில் இருந்த பாண்டிதுரையின் உடலை கைப்பற்றினர்.மேலும், நந்தினி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The young woman who beat her husband to death Due to illegal affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->