வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர்.! வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த வாலிபர் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி விஜயா(48) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் செந்தில்குமார்(30) ஆகிய இரண்டு பேரும் திருச்சி மாவட்டம் மேலமஞ்சமேடு பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்தனர்.

இதையடுத்து வளைகாப்பு முடிந்தவுடன், விஜயா செந்தில்குமார் மற்றும் மேலும் இரண்டு பேருடன் ராமசமுத்திரம் பெரிய வாய்க்கால் பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது வாய்க்காலில் குளித்தபோது செந்தில்குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அங்கிருந்தவர்கள் செந்தில்குமரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் செந்தில்குமாரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து செந்தில்குமார் அதே பகுதியில் உள்ள கோவில் அருகே பிணமாக மிதந்து உள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றிய பரிசோதனைக்காக காட்டுப்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The young man drowned in the drain in Trichy


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->