விளையாட்டு வினையானது.. காதலியை மிரட்ட வாலிபர் செய்த செயல்..வீடியோ காலில் அதிர்ச்சி!
The sports questionThe action of the young man threatening his girlfriend Shock in the video era
வீடியோ காலில் பேசியபோது தகராறு ஏற்பட்டு காதலியை மிரட்ட விளையாட்டாக வாலிபர் தூக்கில் தொங்குவது போல நடித்தபோது விபரீதம் நடந்துள்ளது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவருக்கு திருமணமாகி மனைவியும், ஜெய்சங்கரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஜெய்சங்கரன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பில் சேர்வதற்காக காத்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஜெய்சங்கரனும் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இனம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து ஜெய்சங்கரன் காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெய்சங்கரன் தனது காதலியிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் போர்வையால் தூக்குப்போட்டு தொங்கினார்.
அப்போது திடீரென போர்வை கழுத்தில் இறுக்கியதால் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரது அலறல் சத்தம் கேட்டு ஜெய்சங்கரனின் தாயார் ஓடி வந்து அறையின் கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியாததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அதற்குள் ஜெய்சங்கரன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
பின்னர் இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெய்சங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
The sports questionThe action of the young man threatening his girlfriend Shock in the video era