மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன்..பங்கு தராததால் ஆத்திரம்! - Seithipunal
Seithipunal


சொத்தில் பங்கு தராததால் ஆத்திரம் அடைந்த மருமகன் இரும்பு கம்பியால் மாமனாரை அடித்துக்கொன்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதி ராஜா சரண்யா. இவர்களுக்கு  20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி நடைபெற்றது . தற்போது இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன் ராஜா, சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் குமரன் நகர், நேரு தெருவில் ஒரு வருடமாக குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கி, ஓட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.

 இந்தநிலையில் தேனி மாவட்டம், கல்லுப்பட்டி, வள்ளியம்மை தெருவில் வசித்து வரும் இவரது மாமனார் அழகர்சாமி ஊரில் உள்ள சொத்துகளில் ராஜா குடும்பத்துக்கு பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொழிச்சலூரில் உள்ள மகள் வீட்டுக்கு வந்த அழகர்சாமியிடம், சொத்து தொடர்பாக ராஜா தகராறு செய்துள்ளார் .அப்போது  மாமனார்-மருமகன் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ராஜா, வீட்டின் வெளியே இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து மாமனார் அழகர்சாமியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார் .

இதில் படுகாயமடைந்த அழகர்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . இதுபற்றி தகவல் அறிந்துவந்த சங்கர் நகர் போலீசார் கொலையான அழகர்சாமி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The son in law who killed the uncle in law anger due to not sharing the profit


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->