காஞ்சிபுரம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முதியவர் கிருஷ்ணன்(75). இவர் வீட்டிலிருந்து ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வெள்ளைகேட் வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The old man who fell into the abyss died in kanchipuram


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->