முருக பக்தர்கள் மாநாடு முக்கியமான நாளாக இருக்கும்..சொல்கிறார் எல்.முருகன்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும்  சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில்  செய்தியாளர்களைச் சந்தித்த  மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் இந்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:- தமிழக அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் முக்கியமான நாளாக முருக பக்தர்கள் மாநாடு இருக்கும். கோவில்கள், சட்டம்- ஒழுங்கு போன்றவை மாநில அரசின் கீழ் இருந்தாலும் சட்டம்- ஒழுங்கை முறைப்படுத்துவது மாநில அரசின் கடமை.

 முருக பக்தர்கள் மாநாட்டினுடைய முக்கிய சாராம்சமே கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். கோவில்களில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகளை செய்து தரமுடியவில்லை என்றால் கோவிலை விட்டு வெளியேறுங்கள் என்று மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தி.மு.க. மீது மக்கள் மிக பெரிய அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருப்தி நம் மீதும் வரக்கூடாது என்று கூட்டணி கட்சியினரும் நினைக்கின்றனர்.ஆகவே வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி மிக பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தி.மு.க. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக இருக்கின்றனர். 

தமிழகத்தில் துப்பாக்கி, அரிவாள் கலாசாரத்தை தாண்டி கஞ்சா, போதை பொருட்கள் கலாசாரம் ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் புகுந்துள்ளது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கவலை கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Murugan devotees conference will be an important day says L Murugan


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->