புளூடூத் மூலம் விற்பனை செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்..தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்!
The method of selling through Bluetooth should be abolished start cooperative bank employees protest
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கே.முருகேசன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு, கருவிழித்திரை மூலம் விற்பனை செய்வதில் காலதாமதத்தால் புளூடூத் முறையை ரத்து செய்ய வேண்டும்,நகர்வு செய்யப்படும் பொருட்களில் உள்ள அளவு குறைவதை சரி செய்து சரியான அளவில் வழங்க வேண்டும்,விடுமுறை நாட்களில் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு பணிகளை ரத்து செய்ய வேண்டும்,விற்பனையாளர்களுக்கு மாவட்ட அளவில் பொது பணி மூப்பு வரிசை ஏற்படுத்தி அனைவருக்கும் பதவி உயர்வில் சமவாய்ப்பு வழங்க வேண்டும், விற்பணையாளர்கள் இருப்பிடத்தில் இருந்து குறைந்தபட்ச தூரத்தில் பணி மாறுதல் செய்து பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் பெண்களும், மாற்றுத்திறனாளிகளும்,மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் ஜூலை மாதம் 14-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் மா.பொன்னன், துணைத்தலைவர்கள் ஏ.மாரி, ஏ.நூர்முகமது, இணைச் செயலாளர்கள் பி.ஜெயச்சந்திரன், வி.எஸ்.மேகநாதன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
The method of selling through Bluetooth should be abolished start cooperative bank employees protest