மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகள் மின் கம்பியில் உரசியதால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பகுதியில் வசித்து வருபவர் நாகலெட்சுமி (16). இவர் மணிமேகலை (3) என்ற சிறுமியுடன் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக அவர்கள் அங்கிருந்த மின் கம்பியின் மீது உரசினர்.

அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டனர். உடனடியாக அவர்களை  மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The girls who were playing on the terrace were electrocuted


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->