மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்..!
The girls who were playing on the terrace were electrocuted
மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகள் மின் கம்பியில் உரசியதால் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பகுதியில் வசித்து வருபவர் நாகலெட்சுமி (16). இவர் மணிமேகலை (3) என்ற சிறுமியுடன் வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரத விதமாக அவர்கள் அங்கிருந்த மின் கம்பியின் மீது உரசினர்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டனர். உடனடியாக அவர்களை மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The girls who were playing on the terrace were electrocuted