மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர்!
The district collector provides welfare assistance to the public at the public grievance redressal meeting
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து 533 மனுக்களை பெற்றுக் கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 533 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 86 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 98 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 76 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 45 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 228 மனுக்களும் என மொத்தம் 533 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3.11.400 மதிப்பீட்டில் நவீன செயற்கை அவையங்களும் , All the Children Integrated Children Home தொண்டு நிறுவனம் மூலம் வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் 24 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள், அக்குல் கட்டை, எல்போ ஊன்றுகோல், நடை உபகரணங்கள் ஆகியவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், உதவி ஆணையர் கலால் கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் பாலமுருகன் (திருவள்ளூர்), கனிமொழி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் உஷா ராணி , மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
The district collector provides welfare assistance to the public at the public grievance redressal meeting