ஜூலை 07-இல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா..!
The consecration ceremony of Tiruchendur Subramania Swamy Temple on July 07
எதிர்வரும் ஜூலை 07-ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. அன்று காலை 06.15 முதல் 06.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழா 2025-ஆம் ஆண்டு ஜூலை 01 முதல் ஜூலை 07 வரை வெகு சிறப்பாக நடைபெறள்ளது.

இதில் முக்கிய நிகழ்வான திருக்குட நன்னீராட்டு ஜூலை 07-ஆம் தேதி காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான, ஆனந்தவல்லி அம்பாள் திருக்கோயில், சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில், வெயிலு கந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிர்த குண விநாயகர் மற்றும் ஸ்ரீ சொர்ணவர்ண சாஸ்தா கோயில்களில் இன்று (ஜூன் 06) குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The consecration ceremony of Tiruchendur Subramania Swamy Temple on July 07