கரூரில் பயங்கரம்.! மது அருந்துவதை தட்டிக்கேட்ட சமையல்காரர் கத்தியால் குத்திக்கொலை.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் வீட்டு முன்பு மது அருந்துவதை தட்டிக்கேட்ட சமையல்காரரை கத்தியால் குத்திய 2 பேர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் மக்கள்பாதை கிட்டி சாகிப் பகுதியை சேர்ந்தவர் சமையல்காரர் சரவணன்(45). இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் இவரது வீட்டின் முன்பு அமர்ந்து இரண்டு பேர் மது அருந்தியுள்ளனர். இதனை சரவணன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இரண்டு பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கரூர் டவுன் போலீசார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தப்பி ஓடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The chef was stabbed to murder with a knife in karur


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->