கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை..விபரங்களை வெளியிட்டது மத்திய அரசு!
The central government has released the number of coronavirus vaccinations
இந்தியாவில் 2 தவணைகளாக செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 197 கோடியே 41 லட்சத்து 55 ஆயிரத்து 395 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். புதிய வைரஸ் தொற்று என்பதால், அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்தின.
அப்போது ரஷியாவின் கண்டுபிடிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி, இந்தியாவின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் உலகளவில் மக்களுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் இந்த தடுப்பூசிகளை 2 தவணையாக மக்களுக்கு செலுத்தபட்டது.
தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் 2022-ம் ஆண்டு குறைந்தது.இதையடுத்து 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது.
அவ்வாறு இந்தியாவில் 2 தவணைகளாக செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்து மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது. அதன்படி, 102 கோடியே 36 லட்சத்து ஆயிரத்து 766 முதல் தவணை தடுப்பூசிகளும், 95 கோடியே 5 லட்சத்து 53 ஆயிரத்து 629 2-வது தவணை தடுப்பூசிகளும் என மொத்தம் 197 கோடியே 41 லட்சத்து 55 ஆயிரத்து 395 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The central government has released the number of coronavirus vaccinations