முன்விரோதத்தில் வாலிபரை அடித்துக் கொன்ற சிறுவன்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் வாலிபரை கட்டையால் அடித்து சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் விருதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கட்டிடம் மேஸ்திரி வெங்கடேசன். இவரது மகன் சக்திவேலுக்கு(19), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அருகில் உள்ள ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக சக்திவேல் சென்றபோது அங்கு சிறுவனும் வந்துள்ளான்.

அப்பொழுது இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சிறுவன் சக்தி வேலை கட்டையால் அடித்து தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதை எடுத்து அங்கிருந்து சிறுவன் தப்பி ஓடிவிட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வந்தவாசி போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The boy who beat the youth to death in a previous feud in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->