நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா நாளை தொடக்கம்! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா நெல்லையப்பர் கோவிலில்  நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா  நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழாநாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறும்.அதனை  தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

4-ம் திருவிழாவான 21-ந்தேதி மதியம்  காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு  காந்திமதி அம்மன் திருவீதி உலா , 10-ம் திருநாளான வருகிற 27-ந்தேதி மாலை கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடைபெறஉள்ளது.

அப்போது காந்திமதி அம்மனை கர்ப்பிணி பெண் போல் அலங்கரித்து மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து,அனைத்து பலகாரங்களும் படைக்கப்படும். தொடர்ந்து சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.

அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயிரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சிறுபயிரை குழந்தை இல்லாத பெண்கள் வாங்கி சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Adipura festival at the Nellaiyappar temple starts tomorrow


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->