தஞ்சாவூர் | திருக்கானூர்பட்டியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி!
Thanjavur Thirukanurpatti Jallikattu competition started
தஞ்சாவூர், திருக்கானூர் பட்டியில் புனித அந்தோனியார் பொங்கலையொட்டி இன்று காலை ஜல்லிக்கட்டு விழா தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 700 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் திறக்கப்பட்டு ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.
இவற்றைப் பிடிப்பதற்காக 310 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் முதலில் களமிறங்கியுள்ளனர்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சில்வர் பாத்திரங்கள், சைக்கிள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
English Summary
Thanjavur Thirukanurpatti Jallikattu competition started