பணிச்சுமையால் சோகம்... காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை.!
Thanjavur Kumbakkonam Police Sub Inspector Jegadeesan Suicide
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் திருபுவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி ராதா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெகதீசன் கடந்த 1994 ஆம் வருடத்தில் தமிழ்நாடு காவல்துறையில் காவல் அதிகாரியாக சேர்ந்துள்ளார்.
தற்போது தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில், பதவி உயர்வு பெற்று அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள காவல் காவலர் குடியிருப்பு வளாகத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் பணிக்கு செல்லும் ஜெகதீசன், இன்று பணிக்கு செல்லவில்லை. இதனையடுத்து காவல் நிலையத்தில் இருந்து ஜெகதீசனின் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லாததால், சந்தேகமடைந்த காவல்துறையினர் ஜெகதீசன் குடியிருக்கும் காவலர் குடியிருப்பு வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
இதன்போது ஜெகதீசன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். அவரது குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத நிலையில், ஜெகதீஷின் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ராதா மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் ஜெகதீசனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் வருவதற்கு முன்னதாகவே அவரது உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதால், காவல்துறையினரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thanjavur Kumbakkonam Police Sub Inspector Jegadeesan Suicide