20 நாட்களில் 7 குற்றவாளிகளுக்கு மாவு கட்டு - அதிரடியில் தமிழக போலீஸ்! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் 20 நாட்களில் 7 குற்றவாளிகளுக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

தஞ்சையில் கடந்த 20 நாட்களில் மட்டும் குற்றநிகழ்வுகளில் ஈடுபட்ட 7 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, மாவு கட்டு போடப்பட்டது.

பாப்பாநாடு, தஞ்சை பட்டுநூல்காரத் தெரு உள்ளிட்ட இடங்களில், பாலியல் வன்கொடுமை, நகை கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக போலீசார் கைது செய்து இருந்தனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தப்பிக்க முயற்சித்த போது கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற மாவுக்கட்டு சம்பவங்கள் போலீசார் திட்டமிட்டு செய்வதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

தஞ்சை: திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த சென்னையைச் சேர்ந்த 5 பேர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் நான்கு உடல் மீட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த இந்த ஐந்து இளைஞர்களும் பூண்டி மாதா கோயிலுக்கு வந்த போது கொள்ளிடம் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர்.

தண்ணீரில் மூழ்கிய பிராங்கிளின் (23), மனோகரன் (19), ஆண்டோ (20), கலையரசன் (20), கிஷோர் (20) ஆகியோரில் நான்கு பேரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் உடலை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் வெளியூர் நபர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur crime culprit leg food broke TN police


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->