தஞ்சை பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்! பெண் எஸ்ஐ செய்த கொடூர செயல்! அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


கடந்த 12ஆம் தேதி பாப்பாநாடு பகுதியில் ஒரு இளம் பெண் கூட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் அன்றைய தினமே கைது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த இளம் பெண்ணுக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு ஒரத்தநாடு நீதிமன்றம் ஒரு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இளம்பெண் அளித்த புகாரை ஏற்க மறுத்ததாக போலீசார் ஏற்க மறுத்ததாக ஒரு புகார் எழுந்துள்ளது.

இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, பாப்பாநாடு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சூர்யா, இளம் பெண் அளித்த புகாரை ஏற்க  மறுத்துள்ளார்.

இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், புகாரை எடுக்க மறுத்த பெண் ஆய்வாளர் சூர்யாவை ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கூட்டு பாலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதும், அவர் அளித்த புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjai Young Woman Abused case SI Transfer


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->