#சற்றுமுன் || தஞ்சை அருகே தனியார் பேருந்து மின் கம்பியில் உரசியதில் 5 பேர் பலி.!
THANJAI BUS ACCIDENT
தஞ்சை அருகே சாலையோரம் இருந்த மின்கம்பி மீது பேருந்து உரசியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே சாலை ஓரம் இருந்த குழியில் சிக்கிய தனியார் பேருந்து மின் கம்பி மீது உரசி உரசியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
திருவையாறு அருகே வரகூரில் தனியார் பேருந்து மீது மின் கம்பி உரசி மின்சாரம் தாக்கியதில் 5 பேர் உயிர் இழந்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. முதல்கட்ட தகவலின் படி, பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.