காஞ்சிபுரம் : தெர்மாகோல் குடோனில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் தெர்மாகோல் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

காஞ்சிபுரம் மாவட்டம் வடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான தெர்மாகோல் வைத்திருந்த குடோனில் இருந்து நேற்று இரவு கரும்பு புகை வெளியேறி உள்ளது. இதைப் பார்த்த பகுதியை சேர்ந்தவர்கள் குடோன் அருகே வந்து பார்த்தபோது குடோன் முழுவதும் தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த தகவலையை எடுத்து ஸ்ரீ பெரம்பத்தூர் இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் இந்த பயங்கர தீ விபத்தில் குடோனில் இருந்த இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் இந்த தீ விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible fire accident in Thermocol kudon in kanchipuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->