தற்கொலை செய்து கொண்ட வாலிபர்: கிடைத்த உருக்கமான கடிதம்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


தென்காசி, பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 28). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவருக்கும் பகவதி (வயது 25) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

சமீபத்தில் பகவதி கற்பமானதால் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அருணாச்சலத்தில் தொழில் ரீதியாக மனைவியின் தந்தை பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாக தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி அருணாச்சலம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து அருணாச்சலத்தின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அருணாச்சலம் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. 

அதில் தனது தற்கொலைக்கு மனைவியின் குடும்பத்தினர் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi teenager committed suicide Police investigation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->