தென்காசி: வடமாநில வாலிபரை கரம்பிடித்த பெண்.. பூட்டிய வீட்டில் பிணம்.. தலைமறைவான கொடூரன்.!
Tenkasi Love Married girl Murder By North Indian Husband Police Investigation
தென்காசி மாவட்டத்தில் புதிதாக திருமணம் முடிந்த பெண்மணி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை உச்சிப்பொத்தை கிராமத்தை சார்ந்த பெண்மணி பூங்கோதை . இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவருடன் பணியாற்றி வந்த வடமாநில இளைஞரான ஜோகிந்தர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 40 நாட்களுக்கு முன்னதாக திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் தென்காசி அருகேயுள்ள சுரண்டை கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று வீட்டின் உரிமையாளர் தம்பதிகளின் வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டு இருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து தம்பதிகள் வாடகை கொடுக்காமல் தப்பியோடிவிட்டனரா? என்ற சந்தேகத்தில் மாற்று சாவி வைத்து கதவை திறந்து பார்த்துள்ளார்.
இதன்போது, பூங்கோதை பிணமாக கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் சுரண்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பூங்கோதையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், பூங்கோதையின் காதல் கணவரான ஜோகேந்தர் வீட்டில் இல்லை என்பதால், பூங்கோதையை அவர் கொலை செய்து தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த பெண்மணியை காதல் வார்த்தையில் ஏமாற்றி, திருமணம் என்ற போர்வையில் உல்லாசமாக இருந்துவிட்டு வாலிபர் தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tenkasi Love Married girl Murder By North Indian Husband Police Investigation