தெலுங்கை 3-வது மொழியாக படிக்கலாம்.. நயினார் நாகேந்திரன் சொல்கிறார்!
Telugu can be studied as a third language says Nayinara Nagendran
உங்களை எதாவது ஒரு மொழியைத் தான் படிக்கச் சொல்கிறோம். நம் பக்கத்தில் இருக்கும் தெலுங்கை படிக்கலாம் என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் முருக பக்தர்கள் மாநாட்டில் பேசினார்.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் இன்று மாலை பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றுவருகிறது. திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று இந்த மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.முக்கியமாக மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கலந்து கொண்டார்.
அவர் வேட்டி, சட்டை மற்றும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், "முருகப்பெருமானின் புகழை பரப்புகின்ற நிகழ்வு இது. உண்மையிலேயே இன்று எல்லாரும் மலைத்துப்போய் இருக்கிறார்கள்.பின்னர் இந்த மாநாட்டுக்கு ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் வந்துள்ளார் என்று தெலுங்கில் கூறிய நயினார் நாகேந்திரன் மூன்றாவது மொழியாக தெலுங்கை படிக்கலாம் என்று கூறினார்.
எத்தனையோ தடங்கல் செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். தடைக் கற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி இன்று இவ்வளவு பெரிய நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
"நயினார் நாகேந்திரன் தெலுங்கில் பேசிவிட்டார் என்று கூறுவார்கள். உங்களை எதாவது ஒரு மொழியைத் தான் படிக்கச் சொல்கிறோம். மலையாளம் இருக்கிறது, கன்னடம் இருக்கிறது. நம்முடைய கலாசாரம் ஒருமித்த கலாசாரம்.நம் பக்கத்தில் இருக்கும் தெலுங்கை படிக்கலாம். தமிழ், தெலுங்கு எல்லாம் ஒரே கலாசாரம், பண்பாடு. அதைத்தான் நாம் இணைக்க சொல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Telugu can be studied as a third language says Nayinara Nagendran