அனைத்து டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கேமரா: இல்லையென்றால்... - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டாஸ்மாக் மது பார்களில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. 

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தனர். அதில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின் படி 2024 ஆம் ஆண்டு மக்களவைப் போது தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பாக இந்திய துணை தேர்தல் ஆணையர் கடந்த 6 ஆம் தேதி கூட்டம் ஒன்றை நடத்தினார். 

அதில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 

மேலும் மது கூட வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு புகைப்படத்தை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என மது கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இதனை மீறினால் மது கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, காப்பு தொகை பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac bars cctv camera


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->